color=#000099>color=#ff0000 size=6>இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து ஒன்பது மாதங்கள் கழித்து, 1948 மே 5-ம் தேதி யூதர்களுக்கான தனி தேசம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர், இஸ்ரேல்.
ஆனால், நம்மைப்போல் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவதற்கும் பாடுவதற்கும் இஸ்ரேலுக்கு நேரமில்லை. எல்லாத் திசை களில் இருந்தும் அவர்களை நெருக்கியடித்துத் துரத்துவதற்கு அதிரடிக்கார மச்சான்கள் காத்திருந்தார்கள்.
இஸ்ரேல் யோசித்தது. இதுவரை பாதுகாப்புக்கு இருந்த பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிவிட்டார்கள். இனிமேல் பாலஸ்தீனர்கள். அவர்களுடைய ஆதரவு நாடுகள் நம்மிடம் வாலாட்டாமல் தடுக்க வேண்டுமென்றால், நமது உளவுத்துறையைப் பலப்படுத்தவேண்டும். அக்கம்பக்கத்தில், தூரதேசங்களில் உள்ள நம்முடைய விரோதிகளோ, நண்பர்களோ கொஞ்சம் சத்தமாகத் தும்மினால்கூட அது நமக்குக் கேட்கவேண்டும். அதற்கு என்ன வழி?
1948 ஜூன் 7-ம் தேதி, இஸ்ரேல் பிரதமர் டேவிட் பென்குரியன் தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் சிலரை அழைத்தார். `இன்றைய சூழ்நிலையில் இஸ்ரேலின் உளவு பலத்தை அதிகரிப்பது எப்படி?' என்று ஆலோசனை நடத்தினார்.
பிரதமரே இப்படிக் கேட்கிறபோது, அதிகாரிகள் சும்மா இருப்பார்களா? ஆளாளுக்கு யோசனைகளை வீசினார்கள். விவாதம் தூள் பறந்தது.`உளவுப்பணிகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்தணும்.'
`அதெல்லாம் வேணாம். நம்மோட எதிரிங்க எல்லாரும் ஊருக்குள்ளதான் ஒளிஞ்சிருக்காங்க, அவங்களைத் தோண்டி எடுத்து வெளியே கொண்டுவர்றதுக்கு போலீஸுக்குக் கூடுதல் அதிகாரம் தந்தாலே போதும்.' `போலீஸெல்லாம் அடிதடிக்குத்தான் லாயக்கு. ரகசியமா வேலை பார்க்கணும்ன்னா அதுக்குன்னு தனி உளவு நிறுவனம் இருக்கணும்.'
`உள்ளூர்ல உளவு பார்த்து என்னய்யா பிரயோஜனம்? நம்ம எல்லையைச் சுத்திலும் விரோதிங்க முறைச்சுக்கிட்டிருக்காங்க. அவங்களை நோட்டம் விடறதுக்கு யாராவது வேணாமா?'
`உளவாளிங்களை வெளிநாட்டுக்கு அனுப்பறதுக்கு, அங்கிருக்கறவங்களை நம்ம வேலைக்குப் பயன்படுத்திக்கறதுக்கு ஒரு வழி செய்யணுமே, அது யாரோட பொறுப்பு? அதுக்குத் தேவையான பட்ஜெட்டை யார் ஒதுக்குவாங்க?'இப்படி ஒவ்வொருவரும் பேசப் பேச, பிரதமருக்குத் தலை சுற்றியது. அவருக்கு யாரை நம்புவது என்றே புரியவில்லை. இஸ்ரேலின் உளவுத்துறை எப்படி அமையவேண்டும் என்கிற ஆரம்பக் குழப்பம், இப்போது மேலும் சிக்கலாகிவிட்டது.கடைசியாக, பிரதமர் ஒரு முடிவுக்கு வந்தார். `இவங்க சொல்றது எல்லாமே சரியாத்தான் தோணுது. அதன்படி பார்த்தா, இஸ்ரேலுக்கு ஓர் உளவுத்துறை போதாது. நாலஞ்சு உளவு நிறுவனங்களைத் தொடங்கணும். எல்லோருக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்கணும்.'அன்று இரவு, டேவிட் பென்குரியன் தன்னுடைய டைரியில் எழுதினார், `இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மூன்று உளவு நிறுவனங்களைத் தொடங்கப்போகிறோம்.'
border=0 hspace=10 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-29/imagefolder/08a.jpg" width=220 height=179> முதலில், ராணுவத்தின் உளவுப் பிரிவு. இதன் தலைவர்களாக ஐஸர் பீரி, விவியன் ஹைம் ஹெர்ட்ஸோக் இருவரும் பணியாற்றுவார்கள்.அடுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனி உளவு நிறுவனம். இதற்குப் பொறுப்பு ஐஸர் ஹரேல் மற்றும் யோஸெஃப் யிஸ்ரேலி.மூன்றாவதாக, வெளி அரசியல் விவகாரங்களைக் கவனிக்கும் ஓர் உளவுத்துறைப் பிரிவு. அதன் தலைவர் ரீவென் ஷிலோஹ்.
சும்மா பெயர்களை மட்டும் படிக்கிற நமக்கே இப்படித் தலை சுற்றுகிறது. அப்படியானால், நிஜமாகவே இந்த உளவுப் பிரிவுகளெல்லாம் தனித்தனியாக இயங்கத் தொடங்கியபோது, இஸ்ரேலில் என்னென்ன குழப்பங்கள் முளைத்திருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்!
ஒரு வேலை உருப்படியாக நடக்க வேண்டுமென்றால், அதற்கு யாரேனும் ஒருவர் மட்டும் பொறுப்பேற்க வேண்டும். அப்படியில்லாமல் ஒன்பது பேர் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்து கிண்டினால் உப்புமா காலி.அடுத்த பல மாதங்கள், இஸ்ரேலில் எந்த உளவு வேலையும் உருப்படியாக நடக்கவில்லை. யாராவது எதையாவது செய்ய முயன்றால் போச்சு, மற்ற உளவு நிறுவனங்களுக்கு மகாக் கோபம் வந்தது. `டீச்சர், இவன் என் பென்சிலைப் பிடுங்கறான் டீச்சர்' என்று குற்றம் சாட்டுகிற எல்.கே.ஜி. பிள்ளைகளைப்போல் உடனே பிரதமரிடம் ஓடினார்கள், `பாருங்க சார், இந்த ஆள் எங்க அதிகாரத்தில தலையிடறார்.'
`உங்க அதிகாரமா? அது என்னது?' அங்கேதான் குழப்பமே. ஒன்றுக்கு மூன்று உளவு நிறுவனங்களைத் தொடங்கிவைத்த பிரதமர், யாருக்கு என்ன அதிகாரம் என்பதைத் தெளிவாக வரையறுக்கவில்லை. அவர் குத்துமதிப்பாகச் சொன்ன எல்லைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் புரிந்துகொண்டார்கள். இதனால், யார் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதில் ஏகப்பட்ட சண்டை.
அதற்குமேலாக, பட்ஜெட் களேபரம். ஒவ்வோர் உளவு நிறுவனமும் தன்னை அதிமுக்கியமாக நினைத்துக்கொண்டு எக்ஸ்ட்ரா நிதி ஒதுக்கச் சொல்லிக் கேட்டது. `அவ்ளோ காசுக்கு நான் எங்கே போறது?' என்று பிரதமர் கையை விரித்ததும், ஆளாளுக்குக் கோபித்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்துவிட்டார்கள். `இது என்ன தேங்காய் மூடிக் கச்சேரியா? பட்ஜெட் இல்லாம நாங்க எப்படி வேலை பார்க்கறது?'
இவ்வளவு பேசுகிறார்களே, ஏதாவது செயலில் காட்டுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஒரு முக்கியமான வேலை என்று வரும்போதுதான், `அது என்னோட பொறுப்பு இல்லை. அவனைக் கேளுங்க' என்று மாற்றி மாற்றிக் கை காட்டிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அல்லது, `அந்த ரிப்போர்ட்டா? ஏற்கெனவே என்னோட டிபார்ட்மென்டுக்கு அனுப்பிட்டேனே, உங்களுக்குக் கிடைக்கலியா?' என்று வெறுப்பேற்றினார்கள். கடைசியில் பிரதமருக்கு டென்ஷன் ஏறியதுதான் மிச்சம்.
1949 ஜூலையில், ரீவென் ஷிலோஹ் பிரதமரைச் சந்தித்தார். `நம்மோட உளவு நிறுவனங்கள் ஒவ்வொண்ணும் கண்டபடி தறிகெட்டு ஓடிக்கிட்டிருக்கு. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி மூக்கணாங்கயிறு மாட்டணும்' என்றார். border=0 hspace=10 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-10-29/imagefolder/08b.jpg" width=200 height=134> |
No comments:
Post a Comment