|
Saturday, May 2, 2015
Reminder: Check out Adal's photos on Facebook
Thursday, April 16, 2015
Check out Adal's photos on Facebook.
|
Friday, August 13, 2010
Gujarat News
Between 2007 and 2008, when the Indian Mujahideen (IM), a group of banned Student Islamic Movement of India (SIMI) activists, with the help of the Lashkar-e-Toiba (LeT) and jehadi forces, carried out several bomb blasts across the country in what was virtually a declaration of a war on India, the nation was almost clueless about the invisible enemy. Even as the IM terrorists targeted various cities in Uttar Pradesh, Delhi and Jaipur, the security forces didn't know what to do. Finally, the terrorists attacked Ahmedabad. And that proved to be the bane of the perpetrators.
When Mohammad Abdul Khwaja, a HuJI terrorist actively involved in almost all the terror attacks in South India in the past seven years, was arrested a few months ago he told the Hyderabad Police that the Gujarat Anti-Terrorist squad was on their hit list because of its drive against militant Wahhabis. Indeed, it is to Vanzara's credit that no bomb blast had taken place in Gujarat for almost five years till he was arrested in 2007. The IM terrorists struck in July 2008. Says KPS Gill who brought terrorists to their knees in Punjab, "The actual truth in a police encounter is generally known to law enforcement agencies but still if they act contrarily then it affects the morale of security forces fighting terrorists." Not many amongst the non-political class would contest them.
In a record 20 days, the Gujarat Police cracked the case, and by the time the terrorists targeted Delhi again for the second time in a span of one year, they had found enough clues to pass them on to to their Delhi colleagues. It led to the Batla House encounter in September 2008 and the end of the IM's bloody game in the country. In the past decade, the Gujarat Police has succeeded in ensuring the conviction of 250 accused in terror-related cases.
After the arrest of almost 15 police personnel along with Gujarat minister of state for home Amit Shah in the Sohrabuddin fake encounter case, the Gujarat Police today stands demoralised. The force, once known for its expertise in dealing with terror from militant Wahhabi groups, is today in no position to repeat that feat. Two of the main actors in that historic cracking of the 2007-2008 blasts, Shah and Abhay Chudasama, are in jail now. And they are not the only ones accused of killing the gangster and languishing in jail. Three police officers, whose name struck terror in the hearts of he terrorists, DIG D.G. Vanzara, SP R.K. Pandian and DSP N.K. Amin, are also behind bars for almost three years now.When Mohammad Abdul Khwaja, a HuJI terrorist actively involved in almost all the terror attacks in South India in the past seven years, was arrested a few months ago he told the Hyderabad Police that the Gujarat Anti-Terrorist squad was on their hit list because of its drive against militant Wahhabis. Indeed, it is to Vanzara's credit that no bomb blast had taken place in Gujarat for almost five years till he was arrested in 2007. The IM terrorists struck in July 2008. Says KPS Gill who brought terrorists to their knees in Punjab, "The actual truth in a police encounter is generally known to law enforcement agencies but still if they act contrarily then it affects the morale of security forces fighting terrorists." Not many amongst the non-political class would contest them.
Modi reigns as best CM - India Today
"He has dedicated himself for the people of the state.
He is working incessantly with a passion for inclusive development of the State.
................And the people have acknowledged it whole heartedly!
Not only the people of Gujarat but that of the whole nation!
Not only once but for a number of times now!!
Not only has he been ranked first; but his ratings equal to that of the two next best put together."
Modi reigns as best CM - India Today
He is working incessantly with a passion for inclusive development of the State.
................And the people have acknowledged it whole heartedly!
Not only the people of Gujarat but that of the whole nation!
Not only once but for a number of times now!!
Not only has he been ranked first; but his ratings equal to that of the two next best put together."
Modi reigns as best CM - India Today
Tuesday, November 24, 2009
kps2009-11-15
color=#cc0000>size=6>கங்க்ராஜுலேஷன்ஸ் ஜெனரல்!' யாரோ ஜ்வி ஜமீரின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் குலுக்கினார்கள், `உங்க நாட்டுக்குத் திரும்பிப் போனதும் எங்களையெல்லாம் மறந்துடுவீங்கதானே?'
ஜெனரல் ஜ்வி ஜமீர் நாசூக்காகச் சிரித்தார். `நானும் எவ்வளவு நாளைக்குத்தான் ஆர்மி யூனிஃபார்ம்லயே காலம் தள்ளமுடியும்?'
அப்போது ஜ்வி ஜமீருக்கு வயது நாற்பத்து சொச்சம். நிச்சயமாக ரிடையராகிற வயது இல்லை.
`ஊருக்குப் போய் என்ன செய்யப்போறீங்க ஜெனரல்?'
'டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ்' என்றார் ஜ்வி ஜமீர்.
அவர் இப்படிச் சொன்னதும், அங்கிருந்த பலருக்கு ஆச்சரியம். ஒரு ராணுவ அதிகாரி, அதுவும் ஜ்வி ஜமீர்போலச் சுறுசுறுப்பான பேர்வழியால் எப்படி ஜவுளித் தொழிலுக்குள் முடங்கிக் கிடக்க முடியும்? நம்பமுடியவில்லையே!
அவர்கள் சந்தேகப்பட்டது சரிதான். இஸ்ரேல் வட்டாரங்களில், `டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ்' என்றால், `ரகசியம்' என்று அர்த்தம்.
இந்த விஷயம் தெரிந்தவர்கள், தங்களுக்குள் குறும்பாகச் சிரித்துக்கொண்டார்கள், `ஜ்வி ஜமீர் இஸ்ரேலில் ஏதோ விவகாரமான வேலையில் இறங்கப்போகிறார், இந்த மக்குப் பயல்களுக்கு அது புரியவில்லை, அவர் சட்டை, பேண்ட், சல்வார் கமீஸ் வியாபாரம் செய்யப்போவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்!'
சில நாள் கழித்து, ஜ்வி ஜமீர் லண்டனில் இருந்து இஸ்ரேல் வந்து சேர்ந்தார். மொஸாட்டின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உடனடியாக, அவருக்கு அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்தது, `எங்களுக்கு இருநூறு டன் மஞ்சள் கேக் வேணும், ஏற்பாடு செய்யுங்க.'
`மஞ்சள் கேக்'கா? அது என்ன? ஏதாவது சாப்பிடுகிற சமாசாரமா? அதற்கும் மொஸாட் தலைவர் ஜ்வி ஜமீருக்கும் என்ன சம்பந்தம்? அரசாங்கத்துக்கு இருநூறு டன் கேக் செய்து தர அவர் என்ன பேக்கரியா நடத்துகிறார்?
`டெக்ஸ்டைல்ஸ்' போலவே, `மஞ்சள் கேக்'கும் ஒரு ரகசியக் குறியீடுதான். அறிவியல் மொழியில் இதை `யுரேனியா' என்று சொல்வார்கள். இதிலிருந்து `யுரேனியம்' எனப்படும் அணு ஆராய்ச்சிக்கான 'பவர்ஃபுல்' மூலப்பொருளைப் பிரித்தெடுக்க முடியும்.
கொஞ்சம் நமக்குப் புரியும்படி சொல்வதென்றால், தங்கத்தை எப்படி பூமியிலிருந்து வெட்டி எடுக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
மண்ணைத் தோண்டி எடுக்கப்படுகிற தங்கத் தாது, தகதகவென்று மின்னாது. அதனுடன் மண், ஏகப்பட்ட அசுத்தங்கள் கலந்து இருக்கும். இதையெல்லாம் பல்வேறு ரசாயன முறைகளில் சுத்தப்படுத்தி, ஜொலிக்கும் தங்கக் கட்டிகளாக மாற்றுகிறார்கள்.
யுரேனியமும் அப்படித்தான். இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத் தாதுவைப் பல வழிகளில் சுத்திகரித்து `யுரேனியா', அதாவது `மஞ்சள் கேக்'காக மாற்றவேண்டும். பிறகு இதிலிருந்து சுத்தமான யுரேனியம் பிரித்தெடுக்கப்படுகிறது.
அதாவது, முதலில் யுரேனியத் தாது, அதிலிருந்து மஞ்சள் கேக், அதிலிருந்து யுரேனியம், அதிலிருந்து அணுகுண்டு, ஓகேயா?
கெமிஸ்ட்ரி பாடம் போதும். மறுபடி மொஸாட் சமாசாரத்துக்குத் திரும்புவோம்.
இஸ்ரேலுக்கு எதற்கு மஞ்சள் கேக்? அதுவும் இருநூறு டன்?
இந்தக் கேள்விக்கு, இன்னொரு கேள்விதான் பதில்: பயில்வான்கள் வாழும் காலனியில், ஒரு நோஞ்சான் பையன் குடிவந்தால், அவனுடைய கதி என்ன ஆகும்?
அன்றைக்கு இஸ்ரேலின் நிலைமை அப்படித்தான் இருந்தது. சுற்றியுள்ள மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இஸ்ரேலின் ராணுவ பலம் குறைவு. இவர்கள் தனித்தனியாகச் சண்டைக்கு வந்தாலே சமாளிப்பது சிரமம். எல்லோரும் கூட்டுச் சேர்ந்துவிட்டால், அவ்வளவுதான். இஸ்ரேலைக் கொத்துபரோட்டா போட்டுவிடுவார்கள்.
இஸ்ரேல் யோசித்தது, `நாம இப்படி நோஞ்சானா இருக்கறதாலதானே எல்லாரும் சீண்டிப் பார்க்கறாங்க? நம்ம கையில கத்தி இருக்கு, துப்பாக்கி இருக்கு, வெடிகுண்டு இருக்குன்னு தெரிஞ்சா, அப்புறம் அநாவசியமா வாலாட்டமாட்டாங்கதானே?'
உடனடியாக, தன்னுடைய ஆயுத பலத்தை அதிகரிக்க ஆரம்பித்தது இஸ்ரேல். நட்பு நாடுகளின் உதவியுடன் நவீன குண்டெறி விமானங்கள், பீரங்கிகள், போர்க் கப்பல்கள், துப்பாக்கிகள், வெடிபொருள்கள் என்று ஏகப்பட்ட சமாசாரங்களை வாங்கிக் குவித்தார்கள்.
இதனால், வேறொரு பெரிய பிரச்னை முளைத்தது. இவர்களுக்கு ஆயுத சப்ளை செய்யும் `தாதா'க்கள், பதிலுக்கு இஸ்ரேல் தங்களுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். `எங்களை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா, அப்புறம் உங்களுக்கு ஆயுதம் தரமாட்டோம்' என்று மிரட்டினார்கள்.
தவிர, இஸ்ரேல் வாங்கிச் சேர்க்கிற ஆயுதங்கள் எல்லாமே, அக்கம் பக்கத்துப் பங்காளிகளிடமும் நிறைய இருக்கின்றன. அவர்களை விஞ்சி இஸ்ரேல் பெரிய ஆளாகவேண்டுமென்றால், அந்த நாடுகளிடம் இல்லாத ஒரு பிரம்மாஸ்திரம் இஸ்ரேலுக்கு வேண்டும்.
border=0 hspace=5 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-15/imagefolder/07a.jpg" width=150 height=136>
இப்படி இஸ்ரேல் தேர்ந்தெடுத்த பிரம்மாஸ்திரம், அணுகுண்டு!
இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான்மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியிருந்தது. ஹிரோஷிமா, நாகசாகியில் அந்தக் குண்டுகள் ஏற்படுத்திய பேரழிவைப் பார்த்து, ஒட்டுமொத்த உலகமும் கலங்கிப்போயிருந்தது.
ஜஸ்ட் இரண்டு குண்டுகளால் இப்படிச் சர்வநாசம் விளைவிக்க முடியும் என்றால், நாளைக்கு எல்லா நாடுகளும் ஒருவர்மேல் மற்றவர் அணுகுண்டு வீச ஆரம்பித்தால் என்ன ஆகும்? சில நாட்களுக்குள் இந்தப் பூமியே சுடுகாடாக மாறிவிடாதா?
ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களுக்குப் பிறகு, சர்வதேச அளவில் அணு ஆராய்ச்சிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா தொடங்கி அண்டார்டிகா வரை எங்கேயாவது யாராவது ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கிறார்களா என்று துப்பறிவதற்காகவே பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அணு ஆராய்ச்சிக்குப் பயன்படுகிற வேதிப்பொருள்களைத் தயாரிப்பது, விற்பனை செய்வது கடுமையாகக் கண்காணிக்கப்பட்டது. இவற்றையும் மீறி ஒரு நாடு அணுகுண்டு தயாரித்தால், அதன்மீது பொருளாதாரத் தடைகளை விதித்து நாஸ்தி பண்ணிவிடுவோம் என்று மிரட்டினார்கள்.
ஆனால், இஸ்ரேல் அப்போது இருந்த நிலைமையில், இந்த மிரட்டலெல்லாம் அவர்களிடம் எடுபடவில்லை. அக்கம்பக்கத்துப் பயில்வான்களைச் சமாளிக்க வேண்டுமென்றால், நமக்கு நிச்சயமாக அணு ஆயுதங்கள் வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள்.
இதற்காக, டிமோனோ என்ற இடத்தில் ஓர் அணு ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட்டது. அக்கம்பக்கத்திலிருந்து யாரும் அதை நெருங்கிவிடாதபடி பக்காவாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து முடித்தார்கள்.
ஆனால், எப்படியோ இந்த விஷயம் வெளியே கசிந்துவிட்டது. உஷாரான அமெரிக்கா, தன்னுடைய உளவு விமானம் ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியது. டிமோனோ மீது பறந்து சென்ற இந்த விமானம், விசேஷ கேமராவின்மூலம் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தது.
இந்த போட்டோக்களைப் பார்த்தபோது, இஸ்ரேல் ஓர் அணு ஆராய்ச்சி நிலையம் அமைத்திருப்பது உறுதியாகிவிட்டது. உடனே, அமெரிக்காவுக்கு டென்ஷன், `அணு ஆயுதம் தயாரிக்கிற வேலையெல்லாம் வேணாம். ஒழுங்கா டிமோனோவை இழுத்து மூடுங்க' என்று இஸ்ரேலை மிரட்டினார்கள்.
அப்போதும், இஸ்ரேல் அசரவில்லை, `நாங்கள் அணு ஆராய்ச்சி செய்வது உண்மைதான். ஆனால், அதை வைத்து அணுகுண்டு தயாரிக்கமாட்டோம், தொழில் வளர்ச்சி, விவசாயம், மருத்துவத்துறை முன்னேற்றங்களுக்கு மட்டுமே அணுசக்தியைப் பயன்படுத்துவோம்' என்று அறிவித்தார்கள்.
அவர்கள் சொன்னதை யாரும் நம்பவில்லை. இஸ்ரேல் அணுகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கிற தகவல்(?) உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு ஒரே ஒரு நிம்மதி, இஸ்ரேல் என்னதான் பெரிய சைஸ் அணு ஆராய்ச்சி நிலையம் கட்டிவிட்டாலும், அங்கே அவர்கள் அணுகுண்டு தயாரிக்க விரும்பினால், அதற்கு ஏகப்பட்ட மூலப்பொருள்கள் தேவை. அதையெல்லாம் வெளி மார்க்கெட்டில் யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து வாங்கிவிட முடியாது, நிறையக் கட்டுப்பாடுகள், தடைகள் உண்டு. அத்தனையையும் விஞ்சி, அணுகுண்டு செய்வதற்கான பொருள்களை இஸ்ரேலால் திரட்டமுடியாது என்று கணக்குப் போட்டது அமெரிக்கா.
இஸ்ரேலுக்கும் இந்த விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனாலும், எப்படியாவது எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு, அணுகுண்டு ஆராய்ச்சிக்குத் தேவையான `மஞ்சள் கேக்'குகளை வாங்கிவிடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இந்தப் பொறுப்பு மொஸாட் தலைவர் ஜ்வி ஜமீரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலில், உலகம் முழுக்க மஞ்சள் கேக் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று விசாரிக்க ஆரம்பித்தது மொஸாட். இந்த லிஸ்டை உன்னிப்பாக ஆராய்ந்து, பெல்ஜியத்தில் ஒரு கம்பெனிக்கு வட்டம் போட்டார்கள்.
ஒரே பிரச்னை, இஸ்ரேல் அவர்களிடம் நேரடியாக மஞ்சள் கேக் வாங்க முடியாது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், `அணுகுண்டு ஆராய்ச்சிக்கு நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம்' என்று மறுத்துவிடுவார்கள்.
ஆகவே, இஸ்ரேலின் பெயரைச் சொல்லாமல், பெல்ஜியத்திலிருந்து மஞ்சள் கேக்கை லவுட்டவேண்டும். அதற்கு என்ன வழி? ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது மொஸாட்.
அப்போதுதான், அவர்களுக்கு அந்த யோசனை தோன்றியது. அணுகுண்டு ஆராய்ச்சி என்று சொன்னால்தானே எல்லோரும் அலறுகிறார்கள்? அதற்குப் பதிலாக வேறொரு பொய்க் காரணத்தைச் சொல்லி மஞ்சள் கேக்கை வாங்கிவிட்டால் என்ன?
செய்யலாம். ஆனால், இஸ்ரேல் மஞ்சள் கேக் வாங்குகிறது என்று தெரிந்தாலே, அமெரிக்காவுக்கு மூக்கு வியர்த்துவிடுமே. அவர்களை எப்படிச் சமாளிப்பது?
அதற்கும் மொஸாட் ஒரு வழி கண்டுபிடித்தது. ஒரு படத்தில் விவேக் சொல்வதுபோல், `ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்ல கை காட்டிட்டு, ஸ்ட்ரெய்ட்டாப் போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்!'
ஜெனரல் ஜ்வி ஜமீர் நாசூக்காகச் சிரித்தார். `நானும் எவ்வளவு நாளைக்குத்தான் ஆர்மி யூனிஃபார்ம்லயே காலம் தள்ளமுடியும்?'
அப்போது ஜ்வி ஜமீருக்கு வயது நாற்பத்து சொச்சம். நிச்சயமாக ரிடையராகிற வயது இல்லை.
`ஊருக்குப் போய் என்ன செய்யப்போறீங்க ஜெனரல்?'
'டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ்' என்றார் ஜ்வி ஜமீர்.
அவர் இப்படிச் சொன்னதும், அங்கிருந்த பலருக்கு ஆச்சரியம். ஒரு ராணுவ அதிகாரி, அதுவும் ஜ்வி ஜமீர்போலச் சுறுசுறுப்பான பேர்வழியால் எப்படி ஜவுளித் தொழிலுக்குள் முடங்கிக் கிடக்க முடியும்? நம்பமுடியவில்லையே!
அவர்கள் சந்தேகப்பட்டது சரிதான். இஸ்ரேல் வட்டாரங்களில், `டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ்' என்றால், `ரகசியம்' என்று அர்த்தம்.
இந்த விஷயம் தெரிந்தவர்கள், தங்களுக்குள் குறும்பாகச் சிரித்துக்கொண்டார்கள், `ஜ்வி ஜமீர் இஸ்ரேலில் ஏதோ விவகாரமான வேலையில் இறங்கப்போகிறார், இந்த மக்குப் பயல்களுக்கு அது புரியவில்லை, அவர் சட்டை, பேண்ட், சல்வார் கமீஸ் வியாபாரம் செய்யப்போவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்!'
சில நாள் கழித்து, ஜ்வி ஜமீர் லண்டனில் இருந்து இஸ்ரேல் வந்து சேர்ந்தார். மொஸாட்டின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உடனடியாக, அவருக்கு அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்தது, `எங்களுக்கு இருநூறு டன் மஞ்சள் கேக் வேணும், ஏற்பாடு செய்யுங்க.'
`மஞ்சள் கேக்'கா? அது என்ன? ஏதாவது சாப்பிடுகிற சமாசாரமா? அதற்கும் மொஸாட் தலைவர் ஜ்வி ஜமீருக்கும் என்ன சம்பந்தம்? அரசாங்கத்துக்கு இருநூறு டன் கேக் செய்து தர அவர் என்ன பேக்கரியா நடத்துகிறார்?
`டெக்ஸ்டைல்ஸ்' போலவே, `மஞ்சள் கேக்'கும் ஒரு ரகசியக் குறியீடுதான். அறிவியல் மொழியில் இதை `யுரேனியா' என்று சொல்வார்கள். இதிலிருந்து `யுரேனியம்' எனப்படும் அணு ஆராய்ச்சிக்கான 'பவர்ஃபுல்' மூலப்பொருளைப் பிரித்தெடுக்க முடியும்.
கொஞ்சம் நமக்குப் புரியும்படி சொல்வதென்றால், தங்கத்தை எப்படி பூமியிலிருந்து வெட்டி எடுக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
மண்ணைத் தோண்டி எடுக்கப்படுகிற தங்கத் தாது, தகதகவென்று மின்னாது. அதனுடன் மண், ஏகப்பட்ட அசுத்தங்கள் கலந்து இருக்கும். இதையெல்லாம் பல்வேறு ரசாயன முறைகளில் சுத்தப்படுத்தி, ஜொலிக்கும் தங்கக் கட்டிகளாக மாற்றுகிறார்கள்.
யுரேனியமும் அப்படித்தான். இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத் தாதுவைப் பல வழிகளில் சுத்திகரித்து `யுரேனியா', அதாவது `மஞ்சள் கேக்'காக மாற்றவேண்டும். பிறகு இதிலிருந்து சுத்தமான யுரேனியம் பிரித்தெடுக்கப்படுகிறது.
அதாவது, முதலில் யுரேனியத் தாது, அதிலிருந்து மஞ்சள் கேக், அதிலிருந்து யுரேனியம், அதிலிருந்து அணுகுண்டு, ஓகேயா?
கெமிஸ்ட்ரி பாடம் போதும். மறுபடி மொஸாட் சமாசாரத்துக்குத் திரும்புவோம்.
இஸ்ரேலுக்கு எதற்கு மஞ்சள் கேக்? அதுவும் இருநூறு டன்?
இந்தக் கேள்விக்கு, இன்னொரு கேள்விதான் பதில்: பயில்வான்கள் வாழும் காலனியில், ஒரு நோஞ்சான் பையன் குடிவந்தால், அவனுடைய கதி என்ன ஆகும்?
அன்றைக்கு இஸ்ரேலின் நிலைமை அப்படித்தான் இருந்தது. சுற்றியுள்ள மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இஸ்ரேலின் ராணுவ பலம் குறைவு. இவர்கள் தனித்தனியாகச் சண்டைக்கு வந்தாலே சமாளிப்பது சிரமம். எல்லோரும் கூட்டுச் சேர்ந்துவிட்டால், அவ்வளவுதான். இஸ்ரேலைக் கொத்துபரோட்டா போட்டுவிடுவார்கள்.
இஸ்ரேல் யோசித்தது, `நாம இப்படி நோஞ்சானா இருக்கறதாலதானே எல்லாரும் சீண்டிப் பார்க்கறாங்க? நம்ம கையில கத்தி இருக்கு, துப்பாக்கி இருக்கு, வெடிகுண்டு இருக்குன்னு தெரிஞ்சா, அப்புறம் அநாவசியமா வாலாட்டமாட்டாங்கதானே?'
உடனடியாக, தன்னுடைய ஆயுத பலத்தை அதிகரிக்க ஆரம்பித்தது இஸ்ரேல். நட்பு நாடுகளின் உதவியுடன் நவீன குண்டெறி விமானங்கள், பீரங்கிகள், போர்க் கப்பல்கள், துப்பாக்கிகள், வெடிபொருள்கள் என்று ஏகப்பட்ட சமாசாரங்களை வாங்கிக் குவித்தார்கள்.
இதனால், வேறொரு பெரிய பிரச்னை முளைத்தது. இவர்களுக்கு ஆயுத சப்ளை செய்யும் `தாதா'க்கள், பதிலுக்கு இஸ்ரேல் தங்களுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். `எங்களை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா, அப்புறம் உங்களுக்கு ஆயுதம் தரமாட்டோம்' என்று மிரட்டினார்கள்.
தவிர, இஸ்ரேல் வாங்கிச் சேர்க்கிற ஆயுதங்கள் எல்லாமே, அக்கம் பக்கத்துப் பங்காளிகளிடமும் நிறைய இருக்கின்றன. அவர்களை விஞ்சி இஸ்ரேல் பெரிய ஆளாகவேண்டுமென்றால், அந்த நாடுகளிடம் இல்லாத ஒரு பிரம்மாஸ்திரம் இஸ்ரேலுக்கு வேண்டும்.
இப்படி இஸ்ரேல் தேர்ந்தெடுத்த பிரம்மாஸ்திரம், அணுகுண்டு!
இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான்மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியிருந்தது. ஹிரோஷிமா, நாகசாகியில் அந்தக் குண்டுகள் ஏற்படுத்திய பேரழிவைப் பார்த்து, ஒட்டுமொத்த உலகமும் கலங்கிப்போயிருந்தது.
ஜஸ்ட் இரண்டு குண்டுகளால் இப்படிச் சர்வநாசம் விளைவிக்க முடியும் என்றால், நாளைக்கு எல்லா நாடுகளும் ஒருவர்மேல் மற்றவர் அணுகுண்டு வீச ஆரம்பித்தால் என்ன ஆகும்? சில நாட்களுக்குள் இந்தப் பூமியே சுடுகாடாக மாறிவிடாதா?
ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களுக்குப் பிறகு, சர்வதேச அளவில் அணு ஆராய்ச்சிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா தொடங்கி அண்டார்டிகா வரை எங்கேயாவது யாராவது ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கிறார்களா என்று துப்பறிவதற்காகவே பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அணு ஆராய்ச்சிக்குப் பயன்படுகிற வேதிப்பொருள்களைத் தயாரிப்பது, விற்பனை செய்வது கடுமையாகக் கண்காணிக்கப்பட்டது. இவற்றையும் மீறி ஒரு நாடு அணுகுண்டு தயாரித்தால், அதன்மீது பொருளாதாரத் தடைகளை விதித்து நாஸ்தி பண்ணிவிடுவோம் என்று மிரட்டினார்கள்.
ஆனால், இஸ்ரேல் அப்போது இருந்த நிலைமையில், இந்த மிரட்டலெல்லாம் அவர்களிடம் எடுபடவில்லை. அக்கம்பக்கத்துப் பயில்வான்களைச் சமாளிக்க வேண்டுமென்றால், நமக்கு நிச்சயமாக அணு ஆயுதங்கள் வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள்.
இதற்காக, டிமோனோ என்ற இடத்தில் ஓர் அணு ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட்டது. அக்கம்பக்கத்திலிருந்து யாரும் அதை நெருங்கிவிடாதபடி பக்காவாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து முடித்தார்கள்.
ஆனால், எப்படியோ இந்த விஷயம் வெளியே கசிந்துவிட்டது. உஷாரான அமெரிக்கா, தன்னுடைய உளவு விமானம் ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியது. டிமோனோ மீது பறந்து சென்ற இந்த விமானம், விசேஷ கேமராவின்மூலம் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தது.
இந்த போட்டோக்களைப் பார்த்தபோது, இஸ்ரேல் ஓர் அணு ஆராய்ச்சி நிலையம் அமைத்திருப்பது உறுதியாகிவிட்டது. உடனே, அமெரிக்காவுக்கு டென்ஷன், `அணு ஆயுதம் தயாரிக்கிற வேலையெல்லாம் வேணாம். ஒழுங்கா டிமோனோவை இழுத்து மூடுங்க' என்று இஸ்ரேலை மிரட்டினார்கள்.
அப்போதும், இஸ்ரேல் அசரவில்லை, `நாங்கள் அணு ஆராய்ச்சி செய்வது உண்மைதான். ஆனால், அதை வைத்து அணுகுண்டு தயாரிக்கமாட்டோம், தொழில் வளர்ச்சி, விவசாயம், மருத்துவத்துறை முன்னேற்றங்களுக்கு மட்டுமே அணுசக்தியைப் பயன்படுத்துவோம்' என்று அறிவித்தார்கள்.
அவர்கள் சொன்னதை யாரும் நம்பவில்லை. இஸ்ரேல் அணுகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கிற தகவல்(?) உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு ஒரே ஒரு நிம்மதி, இஸ்ரேல் என்னதான் பெரிய சைஸ் அணு ஆராய்ச்சி நிலையம் கட்டிவிட்டாலும், அங்கே அவர்கள் அணுகுண்டு தயாரிக்க விரும்பினால், அதற்கு ஏகப்பட்ட மூலப்பொருள்கள் தேவை. அதையெல்லாம் வெளி மார்க்கெட்டில் யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து வாங்கிவிட முடியாது, நிறையக் கட்டுப்பாடுகள், தடைகள் உண்டு. அத்தனையையும் விஞ்சி, அணுகுண்டு செய்வதற்கான பொருள்களை இஸ்ரேலால் திரட்டமுடியாது என்று கணக்குப் போட்டது அமெரிக்கா.
இஸ்ரேலுக்கும் இந்த விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனாலும், எப்படியாவது எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு, அணுகுண்டு ஆராய்ச்சிக்குத் தேவையான `மஞ்சள் கேக்'குகளை வாங்கிவிடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இந்தப் பொறுப்பு மொஸாட் தலைவர் ஜ்வி ஜமீரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலில், உலகம் முழுக்க மஞ்சள் கேக் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று விசாரிக்க ஆரம்பித்தது மொஸாட். இந்த லிஸ்டை உன்னிப்பாக ஆராய்ந்து, பெல்ஜியத்தில் ஒரு கம்பெனிக்கு வட்டம் போட்டார்கள்.
ஒரே பிரச்னை, இஸ்ரேல் அவர்களிடம் நேரடியாக மஞ்சள் கேக் வாங்க முடியாது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், `அணுகுண்டு ஆராய்ச்சிக்கு நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம்' என்று மறுத்துவிடுவார்கள்.
ஆகவே, இஸ்ரேலின் பெயரைச் சொல்லாமல், பெல்ஜியத்திலிருந்து மஞ்சள் கேக்கை லவுட்டவேண்டும். அதற்கு என்ன வழி? ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது மொஸாட்.
அப்போதுதான், அவர்களுக்கு அந்த யோசனை தோன்றியது. அணுகுண்டு ஆராய்ச்சி என்று சொன்னால்தானே எல்லோரும் அலறுகிறார்கள்? அதற்குப் பதிலாக வேறொரு பொய்க் காரணத்தைச் சொல்லி மஞ்சள் கேக்கை வாங்கிவிட்டால் என்ன?
செய்யலாம். ஆனால், இஸ்ரேல் மஞ்சள் கேக் வாங்குகிறது என்று தெரிந்தாலே, அமெரிக்காவுக்கு மூக்கு வியர்த்துவிடுமே. அவர்களை எப்படிச் சமாளிப்பது?
அதற்கும் மொஸாட் ஒரு வழி கண்டுபிடித்தது. ஒரு படத்தில் விவேக் சொல்வதுபோல், `ரைட்ல இண்டிகேட்டர் போட்டு, லெஃப்ட்ல கை காட்டிட்டு, ஸ்ட்ரெய்ட்டாப் போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்!'
kps 2009-11-12
அவர்கள் பேசப்பேச, முனிருக்கு ஆச்சர்யம், ‘எங்களோட ஈராக் ராணுவம், எங்க ஊர் விமான நிலையத்தைப்பத்தியெல்லாம் எங்களைவிட உங்களுக்கு தான் அதிக விவரம் தெரிஞ்சிருக்கு, அது எப்படி?’ என்று கேட்டார்.
மொஸாட் அவருக்குப் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள்.
ஈராக்மட்டுமில்லை, அநேகமாக எல்லா உலக நாடுகளிலும் முக்கியமான இடங்களில் மொஸாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயும் எதுவும் நடந்துவிடமுடியாது.
குறிப்பாக, இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருந்த பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் மத்தியில் பல அரேபியர்களை விலைக்கு வாங்கியிருந்தது மொஸாட். இவர்கள் அனுப்பி வைக்கிற தகவல்களை வைத்துக்கொண்டு, இஸ்ரேலால் எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் சுலபமாகச் சமாளித்துவிட முடிந் தது.
மிய்ர் அமித் காலத்தில் மொஸாடின் உளவு நெட்வொர்க் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தது. ஒருபக்கம் திறமைசாலி ஏஜென்டுகள், இன்னொருபக்கம் அமெரிக்கா, சி.ஐ.ஏ. புண்ணியத்தில் அதிநவீன சாதனங்கள், மூன்றாவதாக மொஸாட் நிபுணர்கள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிக்கொண்ட தனித் ’ திறமை’கள், தொழில்நுட்ப சாகசங்கள் எல்லாமாகச் சேர்ந்து அவர்களை உலகத் தரத்துக்கு உயர்த்தியிருந்தது.
மிக்21 கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவத் தலைவர்கள், அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் என எல்லோரும் மொஸாடைத் தனி மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் அவர்களிடம் நம்பி ஒப்படைக்கலாம், தலைகீழாக நின்று தண்ணீர் குடித் தாவது வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்திருந்தது.
இதனால், இஸ்ரேலைச் சுற்றிலும் எங்கே எந்தப் பிரச்னை என்றாலும், முதலில் மொஸாடைக் கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது, ‘நாங்கள் இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டோம், உண்மைதானா? இதுபற்றி உங்களிடம் ஏதாவது கூடுதல் தகவல்கள் இருக்கிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் இப்போது என்ன செய்தால் பிரச்னையைச் சமாளிக்கலாம்?’
அறுபதுகளின் மத்தியில், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் நடுவே நிறைய அரசியல் பிரச்னைகள். எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பிரயோஜனம் இல்லை. அவர்கள் நம்மை அடிப்பதற்குமுன்னால் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது இஸ்ரேல்.
உடனடியாக, மொஸாடுக்கு அழைப்பு வந்தது, ‘நாம எகிப்துமீது படையெடுக்கணும். அதை எப்போ செய்யலாம், எப்படிச் செய்யலாம்னு கொஞ்சம் கவனிச்சுச் சொல்லுங்க’ மிய்ர் அமித் சுறுசுறுப்பானார். எகிப்தில் இருக்கும் மொஸாட் உளவாளிகளைக் கூப்பிட்டுப் பேசினார், அங்கே இன்னும் பல முக்கிய இடங்களில் தன் னுடைய ஆட்களை நுழைப்பதற்குத் திட்டம் தயாரித்தார்.
அப்போது எகிப்து நாட்டின் மிகப் பெரிய பலம், அவர்களுடைய அதிநவீன விமானப் படை. அதோடு ஒப்பிடும்போது, இஸ்ரேல் சின்னக் கரப்பான் பூச்சியைப்போல. போர் தொடங்கி, எகிப்து விமானங்கள் இஸ்ரேல்மீது பறந்தால் அவ்வளவுதான், சில மணி நேரங்களுக்குள் மொத்தத் தேசத்தையும் தரைமட்டமாக்கிவிடுவார்கள்.
ஆக, இஸ்ரேல் எகிப்தை அடிக்க வேண்டுமென்றால், முதலில் அவர்களுடைய விமானப் படையை முடக்க வேண்டும். அதைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து நிற்கும்போது, சண்டையை நமக்குச் சாதகமாகத் திருப்பிவிடலாம்!
ஆனால், எகிப்து விமானங்கள் மிகப் பிரமாதமான தொழில்நுட்பங்களைக் கொண்டவை. இஸ்ரேல் நாட்டுப் பேப்பர் ராக்கெட்களை வைத்துக்கொண்டு இவற்றை எப்படி அழிக்க முடியும்?
இங்கேதான், மொஸாடின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. எகிப்தில் எங்கெல்லாம் போர் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன, இவற்றை இயக்குகிற விமானிகள் யார், அவர்களுக்குக் கட்டளையிடுகிற அதிகாரிகள் எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள், இந்தப் பார்ட்டிகளுக்கு ஏதாவது பலவீனம் உண்டா, மது, மாது, இன்னபிற ஐட்டங்களுக்கு மயங்குவார்களா, தினந்தோறும் எத்தனை மணிக்கு இந்த விமானங்கள் தயார் நிலையில் இருக்கும், அவற்றுக்கு எரிபொருள் நிரப்புகிற நேரம் என்ன, ஒவ்வொரு விமான நிலையமும் எப்போது மிகப் பரபரப்பாக இருக்கும், எப்போது தூங்கி வழியும் என்ப துபோன்ற விவரங்களைத் திரட்டி இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இஸ்ரேல் ராணுவம் இந்தத் தகவல்களை மேலோட்டமாகப் புரட்டிப்பார்த்தது. அப்படியே ஆடிப்போய்விட்டார்கள், எகிப்து ராணுவத்துக்கேகூட அவர்களுடைய விமான நிலையங்களைப்பற்றி இத்தனை நுணுக்கமான விவரங்கள் தெரிந்திருக்காது, மொஸாடுக்கு எப்படி இதெல்லாம் தெரியவந்தது?
’அதெல்லாம் தொழில் ரகசியம்’ என்றது மொஸாட், ‘இப்போ நீங்க எதுவும் பேசவேண்டாம், ஒழுங்கா நாங்க சொல்றதைமட்டும் கேளுங்க.’
’சரி, சொல்லுங்க, நாங்க என்ன செய்யணும்?’
’பெரும்பாலான எகிப்து விமான நிலையங்கள், காலை எட்டு மணிக்கு ரொம்பச் சுறுசுறுப்பா இருக்கும். எங்கே பார்த்தாலும் விமானங்கள், அதுக்கு எரிபொருள் நிரப்பற வண்டிகள், பறக்கறதுக்கு ரெடியாகிட்டிருக்கிற விமானிகள்னு எல்லோரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருப்பாங்க. அந்த நேரம் பார்த்து நீங்க அதிரடியாத் தாக்கினா, கொஞ்ச நேரத்துக்குள்ள நிறைய சேதம் உண்டாக்கிடலாம்.’
’ஒருவேளை, அவங்களும் பதிலுக்குத் தாக்க ஆரம்பிச்சா?’
முதன்முறையாக, இஸ்ரேல் ராணுவத்தினருக்கு எகிப்தை ஜெயித்துவிட முடியும் என்று நம்பிக்கை வந்தது. ஒரு நல்ல உளவு நெட்வொர்க்கின் பலம் எப்பேர்ப்பட்டது என்று அனுபவபூர்வமாகப் புரிந்து கொண்டார்கள்.
‘சரி, நாங்க கரெக்டா எத்தனை மணிக்குப் புறப்படணும்?’
‘ஏழே முக்கால்’ என்று முகூர்த்த நேரம் குறித்துக் கொடுத்தது மொஸாட். ‘சரியா எட்டு மணிக்கு அவங்களை அடிக்க ஆரம்பிக்கணும், அவ்ளோதான்.’
1967-ம் வருடம் ஜூன் 5-ம் தேதி, இஸ்ரேல் பிரதமர் லெவி இஷ்கல் எகிப்தின்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். சரித்திரத்தில் ‘ஆறு நாள் போர்’ (ஷிவீஜ் ஞிணீஹ் கீணீக்ஷீ) என்று வர்ணிக்கப்படும் அதிவேக யுத்தம் தொடங்கியது.
அன்றைய தினம் எகிப்தை நோக்கி விரைந்த இஸ்ரேல் விமானங்கள், மிகத் துல்லியமாக 8:01க்குத் தாழ்வாகக் கீழே பறந்தன. அடிக்க ஆரம்பித்தார்கள்.
மொஸாட் சொன்னதுபோலவே, எகிப்து விமானிகள், ராணுவத்தினர் யாரும் இந்தத் திடீர் தாக்குதலைச் சமாளிக்கக்கூடிய நிலைமையில் இல்லை. அவர்கள் சுதாரித்துக்கொள்வதற்குள், எகிப்து விமானங்கள், எரிபொருள் வண்டிகளை இஸ்ரேல் குண்டுகள் வரிசையாகத் தகர்க்க ஆரம்பித்தன. இவை ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக வெடித்துச் சிதற, எக்ஸ்ட்ரா லார்ஜ் சேதம்.
சில நிமிடங்களுக்குள், நூற்றுக்கணக்கான எகிப்து விமானங்கள், வீரர்களை அழித்துவிட்டது இஸ்ரேல். அப்போதே, இந்தப் போரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது.
அப்போதைய எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர். இத்தனை பிரமாதமான தனது விமானப் படை இப்படிக் கண் சிமிட்டும் நேரத்துக்குள் உடைத்து எறியப்பட்டுவிட்டதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
அவ்வளவு ஏன்? இஸ்ரேலுக்குள்ளேயே, பலரால் இந்த வெற்றியை நம்பமுடியவில்லை. எல்லோரும் மொஸாடின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து கொண்டிருந்தார்கள்.
உண்மையில், இது தீர்க்க தரிசனமும் இல்லை, ஒரு புண்ணாக்கும் இல்லை. பல மாதங்கள் பொறுமையாக உட்கார்ந்து தகவல் திரட்டியதன் பலன், அந்தத் தகவல்களை ஒழுங்காக அலசி, அதனைச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தினால் அதன்மூலம் மிகப் பெரிய வெற்றிகளைப் பெறமுடியும் என்று சாட்சியுடன் நிரூபித்துவிட்டது மொஸாட்.
ஒருவேளை, அந்த ஜூன் 5-ம் தேதி இஸ்ரேலிய ராணுவம் ஜஸ்ட் கால் மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டிருந்தால்கூட, எகிப்து விமானங்கள் அனை த்தும் தயார் நிலையில் இருந்திருக்கும், அதிகாரிகள் மசால் வடையைத் தின்று ஏப்பம் விட்ட கையோடு இஸ்ரேல் விமானங்களை நடுவானத்தில் கொளுத்திச் சொக்கப்பனை கொண்டாடியிருப்பார்கள். ஒட்டுமொத்தப் போரும் எகிப்துக்குச் சாதகமாகத் திசை மாறியிருக்கும்!
ஆறு நாள் போரில் இஸ்ரேல் பெற்ற வெற்றிகளுக்கு, அவர்களுடைய உளவுத்துறை பலம் ஒரு மிக முக்கியமான காரணம். இதன்மூலம், மொஸாட் நினைத்தால் எங்கேயும் ஊடுருவமுடியும், எப்பேர்ப்பட்ட எதிரியின் பலவீனங்களையும் கண்டுபிடித்துத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது உறுதியாகிவிட்டது. அதன்பிறகு, பல நாடுகள் தங்கள் மண்ணில் இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கத் தயங்கினார்கள்.
இதைப் பார்த்து உற்சாகமான இஸ்ரேல் அரசாங்கம், தங்களுடைய உளவுத்துறைக்கு இன்னும் பல அதிகாரங்கள், முக்கியப் பொறுப்புகளை அள்ளி வழங்கியது. மொஸாடின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது.
kps2009-11-08
color=#000099>`color=#ff0000 size=6>குட்மார்னிங் ரெட்ஃபா.'
`மார்னிங்', முனிர் ரெட்ஃபா அந்த ஈராக் விமானிகளைச் சலனமில்லாமல் பார்த்தார். இப்போது சிரித்துக்கொண்டே காலை வணக்கம் சொல்லும் இவர்கள், இன்னும் சில மணி நேரம் கழித்து, என்னை வில்லனாகப் பார்க்கப்போகிறார்கள். கொலை வெறியோடு துரத்தப்போகிறார்கள். `துரோகியைச் சுட்டு வீழ்த்தவேண்டும்' என்று துடிக்கப்போகிறார்கள்.
'அதற்குள், நான் ஈராக் எல்லையைக் கடந்து ரொம்ப தூரம் போய்விடுவேன்' என்று நினைத்துக் கொண்டார் ரெட்ஃபா, `அதன்பிறகு எந்தப் பிரச்னையும் இருக்காது, என்மீது தூசு துரும்புகூடப் படாமல் இஸ்ரேல்காரர்கள் கவனித்துக்கொள்வார்கள்.'
இப்படி ஆயிரம்தான் சமாதானம் சொன்னாலும், அவரால் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லாம் ஒழுங்காக நடக்குமா என்கிற தவிப்பு. முதல்முறையாகச் சட்டத்தை, அதுவும் ராணுவ நியதிகளை மீறித் தப்பு செய்கிற படபடப்பு. கொஞ்ச நேரம் கழித்து உடம்பில் உயிர் இருக்குமோ இருக் காதோ என்கிற பயம்.
முனிர் ரெட்ஃபா பிறவி கிரிமினல் இல்லை. இப்போதுகூட, அவர் நினைத்தால் திரும்பிச் சென்றுவிடலாம். ஈராக் ராணுவத்திடம் சரணடைந்து, `இஸ்ரேல்காரர்கள் என்னை மிரட்டி மிக்21 விமானத்தைக் கடத்தச் சொன்னார்கள், நான் ஒப்புக்கொள்ளவில்லை' என்று நைசாகக் கட்சி மாறிவிடலாம்.
ம்ஹூம், அது முடியாது. முனிரின் உறவினர்களெல்லாம் இப்போது இஸ்ரேல் கையில், அவர் லேசாகத் தயங்குகிறார் என்று தெரிந்தாலும்கூட, ப்ளாக்மெயில் ஆரம்பமாகிவிடும்.
அதுமட்டுமில்லை. அப்போது முனிருக்குத் தெரியாத விஷயம், அவர் இஸ்ரேல் வந்திருந்தபோது மொஸாட் திருட்டுத்தனமாகப் பல புகைப்படங்களை எடுத்துவைத்திருந்தது. ஒருவேளை நாளைக்கு முனிர் நல்ல பிள்ளை வேஷம் போட்டுக்கொண்டால், அவரை மிரட்டி வழிக்குக் கொண்டுவருவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
ஆனால், மொஸாட் நினைத்ததுபோல், முனிர் ரெட்ஃபாவின் மனத்தில் பெரிய குழப்பம், சலனம் எதுவும் இல்லை. அவருக்கு ஈராக் ராணுவத்தின்மீது உண்மையான கோபம் இருந்தது. ஆத்மசுத்தியுடன் விமானக் கடத்தலுக்குத் தயாராகிவிட்டார்.
பொதுவாக, மிக்21 விமானங்களில் முழு டேங்க் எரிபொருள் நிரப்பமாட்டார்கள். அன்றைய தேதிக்கு எத்தனை தூரம் பறக்கவேண்டும், அதற்கு எவ்வளவு எரிபொருள் செலவாகும் என்று கவனமாகக் கணக்குப் போட்டு, அதற்குமேல் போனால் போகிறது என்று அரை சொட்டோ, ஒரு சொட்டோ அனுமதிப்பார்கள், அவ்வளவுதான்.
இதுவும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான். யாராவது ஒரு விமானி மிக்21ஐக் கடத்திக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயற்சி செய்தால், பாதியில் எரிபொருள் தீர்ந்துவிடும். அப்படியே தொப்பென்று கீழே விழுந்து சிதறவேண்டியதுதான்.
முனிர் ரெட்ஃபாவுக்கு இந்த விவரம் நன்றாகத் தெரியும். இதைச் சமாளிப்பதற்கும் அவர் ஒரு திட்டம் யோசித்து வைத்திருந்தார்.
மிக்21 விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புகிறவர்கள் எல்லோரும் ஈராக் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு முனிர் ரெட்ஃபாமீது நல்ல மரியாதை இருந்தது.
1966-ம் வருடம் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை, அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார் முனிர் ரெட்ஃபா, `இன்னிக்கு என்னோட விமானத்துக்கு ஃபுல் டேங்க் நிரப்பிடுங்க' என்று கம்பீரமான குரலில் கட்டளையிட்டார்.
நியாயப்படி பார்த்தால், `எதற்காக ஃபுல் டேங்க்?' என்று அவர்கள் முனிரைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். பெரிய அதிகாரியின் அனுமதி இல்லாமல் மிக்21க்கு அவ்வளவு எரிபொருள் நிரப்பமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும்.
ஆனால், முனிர் ரெட்ஃபா மாதிரி ஒரு சீனியர் பைலட்மீது அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. இன்றைக்கு ஏதோ அவசர வேலையாக ஐயா ரொம்ப தூரம் பயணம் செய்யப்போகிறார்போல என்று நினைத்துக் கொண்டார்கள். அவர் கேட்டபடி முழு டேங்க் எரிபொருளை நிரப்பிவிட்டார்கள்.
சில நிமிடங்களில், முனிரின் மிக்21 விமானம் புறப்பட்டது. யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக, வழக்கமான பாதையில் சிறிது நேரம் பறந்துகொண்டிருந்தார் முனிர் ரெட்ஃபா.
border=0 hspace=10 alt="" vspace=5 align=left src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-08/imagefolder/08a.jpg" width=200 height=271>
யாரும் எதிர்பார்க்காத ஒரு விநாடியில், சட்டென்று அந்த விமானத்தின் பாதை மாறியது. ஈராக் எல்லையை நோக்கி அதிவேகமாகப் பறக்கத் தொடங்கியது.
`அவ்வளவுதான், இனிமேல் நான் திரும்புவதற்கு வழியே இல்லை' பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டார் முனிர். `ஈராக்கைப் பொருத்தவரை நான் ஒரு தேசத்துரோகியாகிவிட்டேன். எந்த நிமிடத்திலும் அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பித்துவிடுவார்கள்.'
அவர் நினைத்ததுபோல், கீழே விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஈராக் அதிகாரிகள் அலறத் தொடங்கியிருந்தார்கள், `இந்தப் பைலட்டுக்கு என்ன ஆச்சு? கேனத்தனமா எங்கேயோ பறக்கறான்? அவனை ரேடியோவிலே பிடிங்க.'
அடுத்த நிமிடம், கரகர குரலில் ரேடியோ அறிவித்தது. `மிஸ்டர் பைலட், காலங்காத்தால தண்ணி போட்டுட்டு விமானத்தைக் கண்டபடி ஓட்டிக்கிட்டிருக்கீங்க. இதெல்லாம் நல்லதுக்கில்லை. உடனடியாத் திரும்பிடுங்க.'
முனிர் சிரித்துக்கொண்டார். பதில் பேசவில்லை.
ரேடியோ மீண்டும் அலறியது, `உங்களுக்குக் கடைசி சான்ஸ், மரியாதையா இப்பவே விமானத்தை யுடர்ன் எடுங்க, இல்லாட்டி உங்களைச் சுட்டு வீழ்த்திடுவோம், ஜாக்கிரதை.'
அவர்கள் மிரட்டிக்கொண்டிருக்கும்போதே, ரேடியோவை அணைத்துவிட்டார் முனிர் ரெட்ஃபா, `மை டியர் ஆஃபீஸர்ஸ், இனிமேல் இது ஈராக் நாட்டு விமானம் இல்லை. இஸ்ரேலுக்குச் சொந்தமானது!'
அப்போதுதான், ஈராக் ராணுவத்துக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. அவசரமாக மற்ற விமானிகளை அழைத்தார்கள், `முனிர் ரெட்ஃபான்னு ஒரு பைலட் மிக்21ஐக் கடத்தப் பார்க்கிறான். அவனைத் துரத்திப் போய் சுட்டுத் தள்ளுங்க' என்று கட்டளையிட்டார்கள்.
ஆனால், அவர்கள் சுதாரித்துக்கொண்டு விமானத்தைத் திருப்புவதற்குள், முனிர் ரெட்ஃபா ரொம்பத் தூரம் போயிருந்தார். இனிமேல் அவரைக் கண்டுபிடித்துச் சுடுவதெல்லாம் சாத்தியமே இல்லை!
`அந்த விமானத்தில எவ்வளவு எரிபொருள் இருக்கு?' பதற்றத்துடன் விசாரித்தது ஈராக்.
`ஃபுல் டேங்க்' என்று பதில் வந்தது.
`படுபாவிங்களா, உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? யாரைக் கேட்டு மிக்21க்கு முழு டேங்க் ரொப்பினீங்க? இப்ப அந்த பைலட் நம்ம விமானத்தை எங்கே கொண்டுபோறானோ, யாருக்குத் தெரியும்?'
அதேநேரம், அங்கே இஸ்ரேலில் உளவாளிகளும் விமானப்படையும் தயார் நிலையில் இருந்தார்கள். முனிர் ரெட்ஃபாவையும் அவருடைய விமானத்தையும் பாதுகாப்புடன் அழைத்து வருவதற்காகக் கச்சிதமான திட்டம் தயாராகியிருந்தது. ஏற்கெனவே முடிவு செய்திருந்த ரகசியப் பாதையின் வழியே மிக்21 பத்திரமாக இஸ்ரேலுக்குள் வந்து இறங்கியது!
மிக்21 கடத்தல் திட்டம், மொஸாட்டுக்கு மிகப் பெரிய வெற்றி. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளின் உளவுத்துறைகளெல்லாம் முயற்சி செய்து தோற்றுப்போன விஷயத்தை, மொஸாட் சர்வசாதாரணமாக ஊதித் தள்ளிவிட்டது.
இதனால், மொஸாட் தலைவர் மிய்ர் அமித்மீது மற்ற அதிகாரிகள், உளவாளிகள், ராணுவத்தினருக்கு இருந்த சந்தேகமெல்லாம் காணாமல்போனது, `பார்ட்டி புத்திசாலிதான்' என்று ஒப்புக்கொண்டு தோளைத் தட்டிக்கொடுத்தது இஸ்ரேல் அரசாங்கம்.
இன்னொரு பக்கம், மூக்கு உடைந்த ஈராக் ராணுவமும் சோவியத் யூனியனும் கோபத்தில் குதித்தன. `எங்களுக்குச் சொந்தமான விமானத்தை அநியாயமாக் கடத்திட்டீங்க, ஒழுங்குமருவாதியா அதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இல்லாட்டி தொலைச்சுப்புடுவோம்' என்று இஸ்ரேலை மிரட்டினார்கள்.
ஆனால், இஸ்ரேல் இந்தச் சலசலப்புகளையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் ஏற்கெனவே மிக்21க்குள் புகுந்து தோண்டித் துருவ ஆரம்பித்திருந்தார்கள். அதன் தொழில்நுட்ப சூட்சுமங்கள் அவர்களுக்கு மெல்லப் புரியத் தொடங்கியிருந்தன.
இதைக் கேள்விப்பட்ட அமெரிக்கா, உடனடியாக இஸ்ரேலைத் தொடர்புகொண்டது, `எங்களுக்கு அந்த மிக்21 வேணுமே!'
`தர்றோம். ஆனா, பதிலுக்கு நீங்க எங்களுக்கு என்ன கொடுப்பீங்க?'
அமெரிக்கா திகைத்தது. நேற்றுவரை நம்முடைய ஆதரவில் வளர்ந்த பயல்கள், இப்போது நம்மிடமே பேரம் பேசுகிற அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்.
ஆனால், இப்போது இவர்களை முறைத்துக்கொண்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர்களிடம் மிக்21 இருக்கிறது. நம்மிடம் இல்லை. ஆகவே, கொஞ்சம் பணிந்துபோவதுதான் புத்திசாலித்தனம். இஸ்ரேல் கேட்டதைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டது அமெரிக்கா.
border=0 hspace=10 alt="" vspace=5 align=right src="http://www.kumudam.com/magazine/Reporter/2009-11-08/imagefolder/08b.jpg" width=200 height=135>
அப்போதும், இஸ்ரேல் உடனடியாக மிக்21ஐ அமெரிக்காவுக்குத் தந்துவிடவில்லை. அதன் நிபுணர்கள் அந்த விமானத்தை நன்கு ஆராய்ச்சி செய்து ஒட்டுமொத்த ஜாதகத்தையும் எழுதிக் கட்டம்போட்டு முடித்தார்கள். அதன்பிறகுதான் அமெரிக்கர்களுக்கு மிக்21 தரிசனம் கிடைத்தது.
இந்தக் கடத்தல் அத்தியாயத்தால் இஸ்ரேலுக்கு இரட்டை லாபம். அடுத்து வந்த போர்களில் மிக்21ஐச் சமாளிப்பது எப்படி என்று புரிந்துவிட்டது, எக்ஸ்ட்ரா வருமானமாக, அந்த மிக்21ஐ அமெரிக்காவுக்குத் தள்ளிவிட்டு, பதிலுக்கு `ஃபான்டம்' என்கிற நவீனரகப் போர் விமானங்களைச் சம்பாதித்துவிட்டார்கள். இதன்மூலம் இஸ்ரேலின் விமானப் படை பலம் கணிசமாக அதிகரித்தது.
இத்தனைக்கும் அடிப்படை, மொஸாட் உளவாளிகளின் கச்சிதமான வேலை. யாராலும் உள்ளே நுழைய முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்த ஈராக்கிலிருந்து ஒரு பெரிய விமானத்தையே தேட்டை போட்டுக் கொண்டுவருவது என்றால் சாதாரண விஷயமா? அதுவரை சி.ஐ.ஏ.வின் நிழலில் இயங்குகிற தம்மாத்தூண்டு கூட்டாளியாக இருந்த மொஸாட், அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது, தனக்குப் பால் ஊட்டி வளர்த்த அமெரிக்காவையே திருட்டுத்தனமாக நோட்டம் விடத் தொடங்கியது!
`மார்னிங்', முனிர் ரெட்ஃபா அந்த ஈராக் விமானிகளைச் சலனமில்லாமல் பார்த்தார். இப்போது சிரித்துக்கொண்டே காலை வணக்கம் சொல்லும் இவர்கள், இன்னும் சில மணி நேரம் கழித்து, என்னை வில்லனாகப் பார்க்கப்போகிறார்கள். கொலை வெறியோடு துரத்தப்போகிறார்கள். `துரோகியைச் சுட்டு வீழ்த்தவேண்டும்' என்று துடிக்கப்போகிறார்கள்.
'அதற்குள், நான் ஈராக் எல்லையைக் கடந்து ரொம்ப தூரம் போய்விடுவேன்' என்று நினைத்துக் கொண்டார் ரெட்ஃபா, `அதன்பிறகு எந்தப் பிரச்னையும் இருக்காது, என்மீது தூசு துரும்புகூடப் படாமல் இஸ்ரேல்காரர்கள் கவனித்துக்கொள்வார்கள்.'
இப்படி ஆயிரம்தான் சமாதானம் சொன்னாலும், அவரால் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லாம் ஒழுங்காக நடக்குமா என்கிற தவிப்பு. முதல்முறையாகச் சட்டத்தை, அதுவும் ராணுவ நியதிகளை மீறித் தப்பு செய்கிற படபடப்பு. கொஞ்ச நேரம் கழித்து உடம்பில் உயிர் இருக்குமோ இருக் காதோ என்கிற பயம்.
முனிர் ரெட்ஃபா பிறவி கிரிமினல் இல்லை. இப்போதுகூட, அவர் நினைத்தால் திரும்பிச் சென்றுவிடலாம். ஈராக் ராணுவத்திடம் சரணடைந்து, `இஸ்ரேல்காரர்கள் என்னை மிரட்டி மிக்21 விமானத்தைக் கடத்தச் சொன்னார்கள், நான் ஒப்புக்கொள்ளவில்லை' என்று நைசாகக் கட்சி மாறிவிடலாம்.
ம்ஹூம், அது முடியாது. முனிரின் உறவினர்களெல்லாம் இப்போது இஸ்ரேல் கையில், அவர் லேசாகத் தயங்குகிறார் என்று தெரிந்தாலும்கூட, ப்ளாக்மெயில் ஆரம்பமாகிவிடும்.
அதுமட்டுமில்லை. அப்போது முனிருக்குத் தெரியாத விஷயம், அவர் இஸ்ரேல் வந்திருந்தபோது மொஸாட் திருட்டுத்தனமாகப் பல புகைப்படங்களை எடுத்துவைத்திருந்தது. ஒருவேளை நாளைக்கு முனிர் நல்ல பிள்ளை வேஷம் போட்டுக்கொண்டால், அவரை மிரட்டி வழிக்குக் கொண்டுவருவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
ஆனால், மொஸாட் நினைத்ததுபோல், முனிர் ரெட்ஃபாவின் மனத்தில் பெரிய குழப்பம், சலனம் எதுவும் இல்லை. அவருக்கு ஈராக் ராணுவத்தின்மீது உண்மையான கோபம் இருந்தது. ஆத்மசுத்தியுடன் விமானக் கடத்தலுக்குத் தயாராகிவிட்டார்.
பொதுவாக, மிக்21 விமானங்களில் முழு டேங்க் எரிபொருள் நிரப்பமாட்டார்கள். அன்றைய தேதிக்கு எத்தனை தூரம் பறக்கவேண்டும், அதற்கு எவ்வளவு எரிபொருள் செலவாகும் என்று கவனமாகக் கணக்குப் போட்டு, அதற்குமேல் போனால் போகிறது என்று அரை சொட்டோ, ஒரு சொட்டோ அனுமதிப்பார்கள், அவ்வளவுதான்.
இதுவும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான். யாராவது ஒரு விமானி மிக்21ஐக் கடத்திக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயற்சி செய்தால், பாதியில் எரிபொருள் தீர்ந்துவிடும். அப்படியே தொப்பென்று கீழே விழுந்து சிதறவேண்டியதுதான்.
முனிர் ரெட்ஃபாவுக்கு இந்த விவரம் நன்றாகத் தெரியும். இதைச் சமாளிப்பதற்கும் அவர் ஒரு திட்டம் யோசித்து வைத்திருந்தார்.
மிக்21 விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புகிறவர்கள் எல்லோரும் ஈராக் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு முனிர் ரெட்ஃபாமீது நல்ல மரியாதை இருந்தது.
1966-ம் வருடம் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை, அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார் முனிர் ரெட்ஃபா, `இன்னிக்கு என்னோட விமானத்துக்கு ஃபுல் டேங்க் நிரப்பிடுங்க' என்று கம்பீரமான குரலில் கட்டளையிட்டார்.
நியாயப்படி பார்த்தால், `எதற்காக ஃபுல் டேங்க்?' என்று அவர்கள் முனிரைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். பெரிய அதிகாரியின் அனுமதி இல்லாமல் மிக்21க்கு அவ்வளவு எரிபொருள் நிரப்பமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும்.
ஆனால், முனிர் ரெட்ஃபா மாதிரி ஒரு சீனியர் பைலட்மீது அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. இன்றைக்கு ஏதோ அவசர வேலையாக ஐயா ரொம்ப தூரம் பயணம் செய்யப்போகிறார்போல என்று நினைத்துக் கொண்டார்கள். அவர் கேட்டபடி முழு டேங்க் எரிபொருளை நிரப்பிவிட்டார்கள்.
சில நிமிடங்களில், முனிரின் மிக்21 விமானம் புறப்பட்டது. யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக, வழக்கமான பாதையில் சிறிது நேரம் பறந்துகொண்டிருந்தார் முனிர் ரெட்ஃபா.
யாரும் எதிர்பார்க்காத ஒரு விநாடியில், சட்டென்று அந்த விமானத்தின் பாதை மாறியது. ஈராக் எல்லையை நோக்கி அதிவேகமாகப் பறக்கத் தொடங்கியது.
`அவ்வளவுதான், இனிமேல் நான் திரும்புவதற்கு வழியே இல்லை' பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டார் முனிர். `ஈராக்கைப் பொருத்தவரை நான் ஒரு தேசத்துரோகியாகிவிட்டேன். எந்த நிமிடத்திலும் அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பித்துவிடுவார்கள்.'
அவர் நினைத்ததுபோல், கீழே விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஈராக் அதிகாரிகள் அலறத் தொடங்கியிருந்தார்கள், `இந்தப் பைலட்டுக்கு என்ன ஆச்சு? கேனத்தனமா எங்கேயோ பறக்கறான்? அவனை ரேடியோவிலே பிடிங்க.'
அடுத்த நிமிடம், கரகர குரலில் ரேடியோ அறிவித்தது. `மிஸ்டர் பைலட், காலங்காத்தால தண்ணி போட்டுட்டு விமானத்தைக் கண்டபடி ஓட்டிக்கிட்டிருக்கீங்க. இதெல்லாம் நல்லதுக்கில்லை. உடனடியாத் திரும்பிடுங்க.'
முனிர் சிரித்துக்கொண்டார். பதில் பேசவில்லை.
ரேடியோ மீண்டும் அலறியது, `உங்களுக்குக் கடைசி சான்ஸ், மரியாதையா இப்பவே விமானத்தை யுடர்ன் எடுங்க, இல்லாட்டி உங்களைச் சுட்டு வீழ்த்திடுவோம், ஜாக்கிரதை.'
அவர்கள் மிரட்டிக்கொண்டிருக்கும்போதே, ரேடியோவை அணைத்துவிட்டார் முனிர் ரெட்ஃபா, `மை டியர் ஆஃபீஸர்ஸ், இனிமேல் இது ஈராக் நாட்டு விமானம் இல்லை. இஸ்ரேலுக்குச் சொந்தமானது!'
அப்போதுதான், ஈராக் ராணுவத்துக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. அவசரமாக மற்ற விமானிகளை அழைத்தார்கள், `முனிர் ரெட்ஃபான்னு ஒரு பைலட் மிக்21ஐக் கடத்தப் பார்க்கிறான். அவனைத் துரத்திப் போய் சுட்டுத் தள்ளுங்க' என்று கட்டளையிட்டார்கள்.
ஆனால், அவர்கள் சுதாரித்துக்கொண்டு விமானத்தைத் திருப்புவதற்குள், முனிர் ரெட்ஃபா ரொம்பத் தூரம் போயிருந்தார். இனிமேல் அவரைக் கண்டுபிடித்துச் சுடுவதெல்லாம் சாத்தியமே இல்லை!
`அந்த விமானத்தில எவ்வளவு எரிபொருள் இருக்கு?' பதற்றத்துடன் விசாரித்தது ஈராக்.
`ஃபுல் டேங்க்' என்று பதில் வந்தது.
`படுபாவிங்களா, உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? யாரைக் கேட்டு மிக்21க்கு முழு டேங்க் ரொப்பினீங்க? இப்ப அந்த பைலட் நம்ம விமானத்தை எங்கே கொண்டுபோறானோ, யாருக்குத் தெரியும்?'
அதேநேரம், அங்கே இஸ்ரேலில் உளவாளிகளும் விமானப்படையும் தயார் நிலையில் இருந்தார்கள். முனிர் ரெட்ஃபாவையும் அவருடைய விமானத்தையும் பாதுகாப்புடன் அழைத்து வருவதற்காகக் கச்சிதமான திட்டம் தயாராகியிருந்தது. ஏற்கெனவே முடிவு செய்திருந்த ரகசியப் பாதையின் வழியே மிக்21 பத்திரமாக இஸ்ரேலுக்குள் வந்து இறங்கியது!
மிக்21 கடத்தல் திட்டம், மொஸாட்டுக்கு மிகப் பெரிய வெற்றி. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளின் உளவுத்துறைகளெல்லாம் முயற்சி செய்து தோற்றுப்போன விஷயத்தை, மொஸாட் சர்வசாதாரணமாக ஊதித் தள்ளிவிட்டது.
இதனால், மொஸாட் தலைவர் மிய்ர் அமித்மீது மற்ற அதிகாரிகள், உளவாளிகள், ராணுவத்தினருக்கு இருந்த சந்தேகமெல்லாம் காணாமல்போனது, `பார்ட்டி புத்திசாலிதான்' என்று ஒப்புக்கொண்டு தோளைத் தட்டிக்கொடுத்தது இஸ்ரேல் அரசாங்கம்.
இன்னொரு பக்கம், மூக்கு உடைந்த ஈராக் ராணுவமும் சோவியத் யூனியனும் கோபத்தில் குதித்தன. `எங்களுக்குச் சொந்தமான விமானத்தை அநியாயமாக் கடத்திட்டீங்க, ஒழுங்குமருவாதியா அதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இல்லாட்டி தொலைச்சுப்புடுவோம்' என்று இஸ்ரேலை மிரட்டினார்கள்.
ஆனால், இஸ்ரேல் இந்தச் சலசலப்புகளையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் ஏற்கெனவே மிக்21க்குள் புகுந்து தோண்டித் துருவ ஆரம்பித்திருந்தார்கள். அதன் தொழில்நுட்ப சூட்சுமங்கள் அவர்களுக்கு மெல்லப் புரியத் தொடங்கியிருந்தன.
இதைக் கேள்விப்பட்ட அமெரிக்கா, உடனடியாக இஸ்ரேலைத் தொடர்புகொண்டது, `எங்களுக்கு அந்த மிக்21 வேணுமே!'
`தர்றோம். ஆனா, பதிலுக்கு நீங்க எங்களுக்கு என்ன கொடுப்பீங்க?'
அமெரிக்கா திகைத்தது. நேற்றுவரை நம்முடைய ஆதரவில் வளர்ந்த பயல்கள், இப்போது நம்மிடமே பேரம் பேசுகிற அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்.
ஆனால், இப்போது இவர்களை முறைத்துக்கொண்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர்களிடம் மிக்21 இருக்கிறது. நம்மிடம் இல்லை. ஆகவே, கொஞ்சம் பணிந்துபோவதுதான் புத்திசாலித்தனம். இஸ்ரேல் கேட்டதைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டது அமெரிக்கா.
அப்போதும், இஸ்ரேல் உடனடியாக மிக்21ஐ அமெரிக்காவுக்குத் தந்துவிடவில்லை. அதன் நிபுணர்கள் அந்த விமானத்தை நன்கு ஆராய்ச்சி செய்து ஒட்டுமொத்த ஜாதகத்தையும் எழுதிக் கட்டம்போட்டு முடித்தார்கள். அதன்பிறகுதான் அமெரிக்கர்களுக்கு மிக்21 தரிசனம் கிடைத்தது.
இந்தக் கடத்தல் அத்தியாயத்தால் இஸ்ரேலுக்கு இரட்டை லாபம். அடுத்து வந்த போர்களில் மிக்21ஐச் சமாளிப்பது எப்படி என்று புரிந்துவிட்டது, எக்ஸ்ட்ரா வருமானமாக, அந்த மிக்21ஐ அமெரிக்காவுக்குத் தள்ளிவிட்டு, பதிலுக்கு `ஃபான்டம்' என்கிற நவீனரகப் போர் விமானங்களைச் சம்பாதித்துவிட்டார்கள். இதன்மூலம் இஸ்ரேலின் விமானப் படை பலம் கணிசமாக அதிகரித்தது.
இத்தனைக்கும் அடிப்படை, மொஸாட் உளவாளிகளின் கச்சிதமான வேலை. யாராலும் உள்ளே நுழைய முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்த ஈராக்கிலிருந்து ஒரு பெரிய விமானத்தையே தேட்டை போட்டுக் கொண்டுவருவது என்றால் சாதாரண விஷயமா? அதுவரை சி.ஐ.ஏ.வின் நிழலில் இயங்குகிற தம்மாத்தூண்டு கூட்டாளியாக இருந்த மொஸாட், அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது, தனக்குப் பால் ஊட்டி வளர்த்த அமெரிக்காவையே திருட்டுத்தனமாக நோட்டம் விடத் தொடங்கியது!
Subscribe to:
Posts (Atom)

